350 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.

 

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று சரிவில் தான் உள்ளது.

குறிப்பாக பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க பங்கு சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் சிலவும் சற்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலி மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக இந்திய சந்தைகளும் சற்று சரிவில் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

எனினும் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 109.19 புள்ளிகள் அதிகரித்து, 49,271 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.90 புள்ளிகள் அதிகரித்து, 14,856.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியது. சென்செக்ஸ் 221.45 புள்ளிகள் குறைந்து, 48,940.36 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.30 புள்ளிகள் குறைந்து, 14,800.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1135 பங்குகள் ஏற்றத்திலும், 331 பங்குகள் சரிவிலும், 64 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டாடா மோட்டார்ஸ், லார்சன், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், எம்&எம், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
 

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, லார்சன், எஸ்பிஐ, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி, எம்&எம், கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 பைசா சரிந்து, 73.49 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.34 ரூபாயாகும்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 351.39 புள்ளிகள் குறைந்து, 48,810.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 97 புள்ளிகள் குறைந்து, 14,753.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: Sensex fall 350 points above, nifty trade above 14,750

Market update.. Opening bell: Sensex fall 350 points above, nifty trade above 14,750
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X