சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. நிஃப்டி மீண்டும் 14,450க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் நாங்காவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் சந்தை விடுமுறை ஆதலால், இன்று அதன் தாக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இது தவிர இறுதி காலாண்டு அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், அதிகரித்து வரும் பரவல் என்பது மேலும் சரிவுக்கு வழிவகுக்குமோ என்ற நிலையும் இருந்து வருகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 299.03 புள்ளிகள் குறைந்து, 48,245.03 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.60 புள்ளிகள் குறைந்து, 14,472.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 60.55 புள்ளிகள் அதிகரித்து, 48,604.61 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 35.60 புள்ளிகள் அதிகரித்து, 14,540.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 705 பங்குகள் ஏற்றத்திலும், 706 பங்குகள் சரிவிலும், 81 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஓஎன்ஜிசி, விப்ரோ, டிவிஎஸ் லேப்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கிரசிம், இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டிசிஎஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், இந்தஸிந்த் வங்கி, மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதுவும் ஒரு காரணம்?

இதுவும் ஒரு காரணம்?

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையில், சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. ஏனெனில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால், மீண்டும் பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்து, 75.19 ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது.
தற்போது சென்செக்ஸ் 327.54 புள்ளிகள் குறைந்து, 48,216.52 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 81.80 புள்ளிகள் அதிகரித்து, 14423 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இனி வரும் நாட்களில் சர்வதேச காரணிகள் பலவும் நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+