நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. கடந்த வாரத்திலேயே ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தைகள், பணவீக்கத்தினை அதிகரிக்குமே என்ற கவலைகள் எழுந்துள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் கொரோனா ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆக இது இன்னும் பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் சந்தையானது ஏற்றம் காணலாம் என்றாலும், தற்போதைக்கு ஏற்ற இறக்கத்தில் தான் காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 143.14 புள்ளிகள் குறைந்து, 50,648.94 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 31.80 புள்ளிகள் குறைந்து, 14,999.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1028 பங்குகள் ஏற்றத்திலும், 633 பங்குகள் சரிவிலும், 98 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், கெயில், ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஹெச் சி எல் டெக், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், கெயில், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 561.75 புள்ளிகள் குறைந்து, 50,230.33 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 160.50 புள்ளிகள் குறைந்து, 14,870.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.