நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தில் காணப்படுகின்றன.
இது மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது. இது சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து லாபத்தினை கொடுத்து வருகின்றது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த அமர்வில், அமெரிக்க சந்தையானது சற்று சரிவில் முடிவடைந்தது. இதன் காரணமாக இன்று ஆசிய சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன. எனினும் இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
சர்வதேச சந்தையில் உள்ள சில சாதகமான காரணிகளுக்கு மத்தியில், சந்தை இன்று தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் என்பது மிக அதிகமாகவே உள்ளது. இது இன்னும் கடுமையானால் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.எனினும் சாதகமான தொழில் துறை உற்பத்தி குறித்தான குறியீடு, என சந்தைக்கு சாதகமான சில விஷயங்களும் வந்து கொண்டுள்ளன. இதனால் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 281.23 புள்ளிகள் அதிகரித்து, 59,422.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 79.70 புள்ளிகள் அதிகரித்து, 17,709.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இது இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இது இம்மாத இறுதிக்குள் 60,000 புள்ளிகளை தொடலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹிண்டால் கோ, ஓ.என்.ஜி.சி., யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, இந்தஸிந்த், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது என்ன நிலவரம்
சந்தையில் பஜாஜ் பின்செர்வ் டாப் கெயிர்னர்களில் ஒன்றாக காணப்படுகின்றன. அதே போல நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பங்கு விலையானது அதன் 52 வார உச்சத்தினை எட்டியுள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 451.58 புள்ளிகள் அதிகரித்து, 59,592.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 118.85 புள்ளிகள் அதிகரித்து, 17,748.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
முடிவு நிலவரம்
இன்று காலை வரலாற்று உச்சத்தில் தொடங்கிய சந்தையானது முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 125.27 புள்ளிகள் குறைந்து, 59,015.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 44.35 புள்ளிகள் குறைந்து, 17,585.15 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications