இந்திய பங்கு சந்தைகள் இந்த வருடத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இது பெரியளவில் ஏற்றம் இல்லாவிட்டாலும், இது சற்று வலுவான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. இது ஆட்டோ துறை பங்குகள், கொரோனா வழக்குகள், உற்பத்தி குறித்தான குறியீடுகள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளன. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் கடந்த அமர்வில் 900 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தினை கண்டு முடிவடைந்ததையடுத்து, இன்று தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தைகள் ஏற்றம்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தில் முடிவடைந்தன. இதனையடுத்து இன்று காலை தொடக்கத்திலேயே ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் காணப்பட்டன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது.
இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.
ஓமிக்ரான் அச்சம்
எனினும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஓமிக்ரான் பரவல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏற்கனவே மத்திய அரசு கட்டுப்பாடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் வருமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இதுவும் சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வரத்து
கடந்த ஆண்டின் இறுதியில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஜனவரி 3 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 902.64 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 803.11 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 142.13 புள்ளிகள் அதிகரித்து, 59,325.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 9.90 புள்ளிகள் அதிகரித்து, 17,615.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 167.49 புள்ளிகள் அதிகரித்து, 59,350.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 48.10 புள்ளிகள் அதிகரித்து, 17,673 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1808 பங்குகள் ஏற்றத்திலும், 309 பங்குகள் சரிவிலும், 71 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன, இதில் நிஃப்டி பிஎஸ்இ 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள என் டி பி சி, ஓ என் ஜி சி, பவர் கிரிட் கார்ப், ஐஓசி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டாடா மோட்டார்ஸ், ஹெச் சி எல் டெக், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா கன்சியூமர், சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என் டி பி சி, பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது (9.41 நிலவரப்படி) தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கினாலும், தற்போது சென்செக்ஸ் 79.78 புள்ளிகள் குறைந்து, 59,103.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 25.7 புள்ளிகள் குறைந்து, 17,600 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று வங்கி, ஆட்டோ,பவர் செக்டார் பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.