வருடத்தின் முதல் வர்த்தக நாளே ஏற்றம் தான்.. குதூகலத்தில் வர்த்தகர்கள்..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வருடத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தூள் கிளப்பி வருகின்றன.

கடந்த அமர்வில் வருட இறுதியிலும் சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, இன்று தொடக்கத்திலும் ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் பரவல் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சந்தையில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வரத்து

முதலீடுகள் வரத்து

கடந்த ஆண்டின் இறுதியில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், டிசம்பர் 31 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 575.39 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 1,165.62 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 37.10 புள்ளிகள் அதிகரித்து, 58,290.92 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.50 புள்ளிகள் அதிகரித்து, 17,324.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 300.47 புள்ளிகள் அதிகரித்து, 58,554.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.50 புள்ளிகள் அதிகரித்து, 17,449.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1915 பங்குகள் ஏற்றத்திலும், 436 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன, குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்றவை 1% கீழாக ஏற்றத்தில் மாற்றமின்றி காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே சிப்லா, இந்தஸ்இந்த் வங்கி, பிரிட்டானியா, எம் & எம், ஹெச் டி எஃப் சி லைஃப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டிசிஎஸ், மாருதி சுசுகி, ஹெச் சி எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல இந்தஸ்இந்த் வங்கி, டைட்டன் நிறுவனம், பிரிட்டானியா, எம் & எம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (9.55 நிலவரப்படி) சென்செக்ஸ் 468.65 புள்ளிகள் அதிகரித்து, 58,722.47 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 136.1 புள்ளிகள் அதிகரித்து, 17,490.15 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று ஐடி, ஆட்டோ, ரியால்டி பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+