சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி மீண்டும் 14,400க்கு அருகில் வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட இந்திய சந்தையானது, இன்று சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இது தவிர இறுதி காலாண்டு அறிக்கைகள் எதிர்பார்ப்பும், பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் அறிக்கைகளை பொறுத்து தங்களது முதலீடுகளை செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று சர்வதேச காராணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 179.11 புள்ளிகள் அதிகரித்து, 48,062.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 35.80 புள்ளிகள் அதிகரித்து, 14,346.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 172 புள்ளிகள் அதிகரித்து, 48,055.38 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54.40 புள்ளிகள் அதிகரித்து, 14,365.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 848 பங்குகள் ஏற்றத்திலும், 357 பங்குகள் சரிவிலும், 56 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஐடி தவிர, மற்ற குறியீடுகள் பச்சனை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள எம் & எம், யுபிஎல், ஓஎன்ஜிசி, ஜே எஸ் டபள்யூ, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், ஓஎன்ஜிசி, பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதுவும் ஒரு காரணம்?

இதுவும் ஒரு காரணம்?

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையில், சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. ஏனெனில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால், மீண்டும் பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகள் செயல்பாட்டில் இருந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 265.75 புள்ளிகள் அதிகரித்து, 48,249.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 120.90 புள்ளிகள் அதிகரித்து, 14431 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
சர்வதேச காரணிகள் பலவும் நிலையற்றதாக உள்ள நிலையில், சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: Sensex trade above 300 points, nifty trade nearly 14,400

Market update.. Opening bell: Sensex trade above 300 points, nifty trade nearly 14,400
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X