நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரத்திலேயே ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், நேற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தைகள், பணவீக்கத்தினை அதிகரிக்குமே என்ற கவலைகள் எழுந்துள்ளன. எனினும் நேற்றைய அமர்வில் வால் ஸ்டீரிட்டில் சந்தைகள் உச்சத்தினை தொட்டன. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தைகளும் தொடக்கத்தில் ஏற்றத்திலேயே தொடங்கின. இதனால் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் கொரோனா ஊக்கத்தொகை இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. ஆக இது பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 257.85 புள்ளிகள் அதிகரித்து, 50,652.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 41.20 புள்ளிகள் அதிகரித்து, 14,970.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 193.45 புள்ளிகள் அதிகரித்து, 50,588.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து, 14,989.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. மற்றவை பச்சை நிறத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் நிறுவனம், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.49 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.48 ரூபாயாகும்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 227.91 புள்ளிகள் அதிகரித்து, 50,622.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 53.85 புள்ளிகள் அதிகரித்து, 14,983.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.