நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் உள்ளது.
கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம் மீண்டு வர, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வகை கொரோனா பரவலானது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 249.33 புள்ளிகள் அதிகரித்து, 52,798.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38 புள்ளிகள் குறைந்து, 15,710.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 212.52 புள்ளிகள் அதிகரித்து, 52,762.18 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 61.90 புள்ளிகள் அதிகரித்து, 15,810.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1553 பங்குகள் ஏற்றத்திலும், 554 பங்குகள் சரிவிலும், 64 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பி.எஸ்.இ ஆயில் & கேஸ் தவிரம், மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், அதானி போர்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், என்.டி.பி.சி, கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், என்டிபிசி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 187.3 புள்ளிகள் அதிகரித்து, 52,736.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54.95 புள்ளிகள் அதிகரித்து, 15,803.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.