நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. இது தொடர்ச்சியாக எட்டாவது நாளாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இது கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததை அடுத்து, முக்கியமான ஆசிய சந்தைகள் பலவும் இன்று தொடக்கத்திலேயே ஏற்றத்தில் காணப்பட்டன.
இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை சரியலாம்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கும்போது, தொழிற்துறைகளில் அதிக செலவினங்களுக்கு வழிவகுக்கலாம். இது உற்பத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தலாம் மேலும் அதன் வளர்ச்சி விகிதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தை ஏற்றத்தினை கண்டாலும், வரவிருக்கும் நாட்களில் சரிவினை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி விகிதம்
நிறுவனங்கள் தொடர்ந்து மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், பல நிறுவனங்கள் சாதகமான அறிவிப்பினை கொடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பபூசியும் சந்தைக்கு சாதகமாக போடப்பட்டு வருகின்றது. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணிகள்
சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை அல்லது உலக நாடுகளுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. இது சர்வதேச பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையில். மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவும், அமெரிக்காவின் தொழிற்சாலை உற்பத்தி மீதான தடையை மெதுவான வளர்ச்சி கண்டுள்ள நிலையில் இது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் நிலவி வருகிறது.
ஏற்றுமதி வளர்ச்சி
இந்தியாவில் ஏற்றுமதியானது அக்டோபர் 1 - 14 வரையிலான காலகட்டத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக முக்கியத் துறைகளான பெட்ரோலியம், இன்ஜினியரிங், கெமிக்கல்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மொத்தத்தில் மீண்டும் 40.5% அதிகரித்து, 15.13 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
முதலீடு அதிகரிப்பு
சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இருந்து வருகின்றது. கடந்த அமர்வில் 512.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,703.87 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இது புராபிட் புக்கிங் செய்யும் விதமாக வெளியேறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது விழாக்கால பருவம்
தற்போது விழாக்கால பருவம் என்பதால் சந்தையில் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், தொடர்ந்து இந்திய சந்தைகள் ஏற்றத்தில் இருந்து வருகின்றன. இதற்கிடையில் பல நிறுவனங்களும் மூன்றாவது காலாண்டில் நல்ல வளர்ச்சி நிலைகளை காட்டி வருகின்றன. ஆக இதுவும் சந்தை ஏற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 352.67 புள்ளிகள் அதிகரித்து, 62,118.26 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 111.10 புள்ளிகள் அதிகரித்து, 18,588.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 264.79 புள்ளிகள் அதிகரித்து, 62,030.38 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76.50 புள்ளிகள் அதிகரித்து, 18,553.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,178 பங்குகள் ஏற்றத்திலும், 327 பங்குகள் சரிவிலும், 81 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த்கேர், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி 50 உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதில் நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 1% மேலாக அதிகரித்துள்ளது. மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, லார்சன், ஹெச்.யு.எல், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, ஈச்சர் மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், ஹெச்.யு.எல், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, பவர் கிரிட் கார்ப், டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 11.47 புள்ளிகள் அதிகரித்து, 61,777 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து, 18,461.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.