பலத்த எதிர்பார்ப்புகளுக்க்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4வது பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் இதன் எதிரொலி இந்திய பங்கு சந்தையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் பட்ஜெட்டில் தொழிற்துறையை ஊக்குவிக்கும் விதமாக வரலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் தொடக்கத்திலேயே ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் பல்வேறு காரணிகளும் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில் சந்தையானது ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏறத்திலேயே முடிவடைந்தது, எனினும் அமெரிக்க டாலரின் மதிப்பானது மூன்று வாரத்தில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதற்கிடையில் இன்று தொடக்கத்திலேயே இந்திய சந்தையும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது பங்குகளை குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 632.12 புள்ளிகள் அதிகரித்து, 58,646.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 135.80 புள்ளிகள் அதிகரித்து, 17,475.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
தொடக்கத்தில் சென்செக்ஸ் 544.97 புள்ளிகள் அதிகரித்து, 58,559.14 புள்ளிகளாகவும், நிஃப்டி 145.70 புள்ளிகள் அதிகரித்து, 17,485.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1510 பங்குகள் ஏற்றத்திலும், 473 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் & நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.பி.சி.எல் , டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், ஐஓசி, அதுல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
9.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 674.43 புள்ளிகள் அல்லது 1.16% அதிகரித்து, 58,688.60 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி183.75 புள்ளிகள் அல்லது 1.06% அதிகரித்து, 17,523.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications