பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான பொரின்ஜூ வெளியத் ஒரு நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியான அடுத்த நிமிடமே அந்த நிறுவன பங்கு லைம் லைட்டுக்கு வந்து விடும்.
ஏனென்றால் அவரை பின்பற்றி பல சில்லரை முதலீட்டாளர்கள் அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வர். தற்போது கேரள ஆயுர்வேதா நிறுவனத்தில் பொரின்ஜூ வெளியத் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ள தகவல் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள ஆயுர்வேதா (Kerala Ayurveda) நிறுவனம் மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (2023 ஏப்ரல்-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 16 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.51.48 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 நவம்பர் 14ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், தனது ஆயுர்வேதகிராம் பாலி வருவாயை ஒருங்கிணைக்க அதன் 50:50 கூட்டு வர்த்தகத்தை மறுகட்டமைக்கும் பணியில் இருப்பதாக தெரிவித்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று கேரள ஆயுர்வேதா நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உயர்வான ரூ.329.75ஐ எட்டியது. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.312.35ஆக இருந்தது.
ஸ்மால்கேப் பங்கான இந்நிறுவன பங்கு கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.
பிரபல மற்றும் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான பொரின்ஜூ வெளியத் இந்த ஸ்மால்கேப் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த டிசம்பர் காலாண்டில் மேலும் 1.64 சதவீத பங்குகளை வாங்கி உள்ளார்.
கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, அந்நிறுவனத்தில் அவர் 3.18 சதவீத பங்கு மூலதனத்தை வைத்து இருந்தார். கடந்த டிசம்பர் காலாண்டில் கூடுதல் பங்குகளை வாங்கியதையடுத்து கேரள ஆயுர்வேதா நிறுவனத்தில் பொரின்ஜூ வெளியத்தின் பங்கு மூலதனம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.17 கோடியாகும். இந்த நிறுவனத்தில் அவர் தொடர்ந்து தனது பங்கு மூலதனத்தை அதிகரித்து வருவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
கேரள ஆயுர்வேதா நிறுவனத்தை தவிர்த்து, பிஜி பாயில்ஸ், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், காயா, மேக்ஸ் இந்தியா, ஷாலிமார் பெயிண்ட்ஸ் மற்றும் சிங்கர் இந்தியா உள்பட 14 நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளார். இந்த பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.219.2 கோடியாகும் என புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications