ஒரே வருடத்தில் 200% மேல் லாபம்.. பிரபல முதலீட்டாளர் Porinju Veliyath செய்த புதிய முதலீடு..!!

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான பொரின்ஜூ வெளியத் ஒரு நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியான அடுத்த நிமிடமே அந்த நிறுவன பங்கு லைம் லைட்டுக்கு வந்து விடும்.

ஏனென்றால் அவரை பின்பற்றி பல சில்லரை முதலீட்டாளர்கள் அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வர். தற்போது கேரள ஆயுர்வேதா நிறுவனத்தில் பொரின்ஜூ வெளியத் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ள தகவல் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வருடத்தில் 200% மேல் லாபம்.. பிரபல முதலீட்டாளர் Porinju Veliyath செய்த புதிய முதலீடு..!!

கேரள ஆயுர்வேதா (Kerala Ayurveda) நிறுவனம் மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (2023 ஏப்ரல்-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 16 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.51.48 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 நவம்பர் 14ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், தனது ஆயுர்வேதகிராம் பாலி வருவாயை ஒருங்கிணைக்க அதன் 50:50 கூட்டு வர்த்தகத்தை மறுகட்டமைக்கும் பணியில் இருப்பதாக தெரிவித்தது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று கேரள ஆயுர்வேதா நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உயர்வான ரூ.329.75ஐ எட்டியது. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.312.35ஆக இருந்தது.

ஸ்மால்கேப் பங்கான இந்நிறுவன பங்கு கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.

பிரபல மற்றும் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான பொரின்ஜூ வெளியத் இந்த ஸ்மால்கேப் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த டிசம்பர் காலாண்டில் மேலும் 1.64 சதவீத பங்குகளை வாங்கி உள்ளார்.

கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, அந்நிறுவனத்தில் அவர் 3.18 சதவீத பங்கு மூலதனத்தை வைத்து இருந்தார். கடந்த டிசம்பர் காலாண்டில் கூடுதல் பங்குகளை வாங்கியதையடுத்து கேரள ஆயுர்வேதா நிறுவனத்தில் பொரின்ஜூ வெளியத்தின் பங்கு மூலதனம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.17 கோடியாகும். இந்த நிறுவனத்தில் அவர் தொடர்ந்து தனது பங்கு மூலதனத்தை அதிகரித்து வருவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

கேரள ஆயுர்வேதா நிறுவனத்தை தவிர்த்து, பிஜி பாயில்ஸ், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், காயா, மேக்ஸ் இந்தியா, ஷாலிமார் பெயிண்ட்ஸ் மற்றும் சிங்கர் இந்தியா உள்பட 14 நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளார். இந்த பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.219.2 கோடியாகும் என புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+