பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது 2023 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் அந்நிறுவன பங்குகளின் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் மதிப்பீடுகளும் அந்நிறுவன பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த சில தினங்களாக ஸ்மால் கேப் பிரிவை சேர்ந்த வாகன பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த மல்டிபேக்கர் பங்கு பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.380 கோடியாக உள்ளது.

பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிராக்டர் மற்றும் வாகன பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எந்திர வார்ப்பு மற்றும் ஆட்டோமோடிவ் டிராக்டர் மற்றும் வாகன பாகங்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.12.42 கோடி ஈட்டியிருந்தது. மேலும், 2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.4.36 கோடியும், 2023 செப்டம்பர் காலாண்டில் ரூ.3.83 கோடியும் ஈட்டியுள்ளது.
பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் வலுவான நிதி முடிவுகள் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் இப்பங்குக்கு வரவேற்பு காணப்படுகிறது. கடந்த சில வர்த்தக தினங்களாக இந்நிறுவன பங்கு விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை அப்பர் சர்க்கியூட்டை தொட்டது. அன்றைய தினம் பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் 14 லட்சம் பங்குகள் கை மாறியது. மேலும், பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெற்ற கடந்த சனிக்கிழமையன்றும் இந்நிறுவன பங்கின் விலை ஏற்றம் கண்டது.
கடந்த சனிக்கிழமையன்று இந்நிறுவன பங்கின் விலை 9.98 சதவீதம் உயர்ந்து புதிய 52 வார உச்சமான ரூ.41.56ஐ எட்டியது. அன்று வர்த்தகம் நிறைவுடையும் போது புதிய உச்ச விலையிலிருந்து இந்நிறுவன பங்கின் விலை குறையவில்லை.
இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் 2.41 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளனர். பங்குச் சந்தையின் மல்டிபேக்கர் பங்குகளில் இதுவும் ஒன்று. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 115 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணம் 124 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications