நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொதுத் துறை வங்கிகள் மறு மூலதன திட்டத்திற்காக 2.11 லட்சம் கோடி அளிக்க இருப்பதாக முதன் முறையாக அறிவித்த போது ஒரு வாரத்திற்கு வங்கிகளின் பங்குகள் தாறுமாறாக உயர்ந்தன.
ஆனால் நேற்று 20 பொதுத் துறை வங்கிகளுக்கு 88,139 கோடி ரூபாயினை மறு மூலதனமாக அளிக்க இருபதாக அறிவித்துள்ள நிலையில் இன்று பொதுத் துறை வங்கி பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்துள்ளன.
சிண்டிகேட் வங்கி
சிண்டிகேட் வங்கி பங்குகள் வெள்ளிக்கிழமை 5.22 சதவீதம் என 4.30 புள்ளிகள் சரிந்து 78.10 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 5.73 சதவீதம் என 11.15 சதவீதம் சரிந்து 183.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
எஸ்பிஐ
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 4.14 சதவீதம் என 13.65 புள்ளிகள் என 315.85 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் பங்குகள் 3.21 சதவீதம் என 4.15 புள்ளிகள் சரிந்து 125.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அலகாபாத் வங்கி
அலகாபாத் வங்கி பங்குகள் 2.87 சதவீதம் என 2.10 புள்ளிகள் சரிந்து 71.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா நிறுவனப் பங்குகள் 1.56 சதவீதம் 2.70 புள்ளிகள் சரிந்து 170.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி மறு மூலதன திட்டம் கீழ் 10,000 கோடிக்கும் கூடுதலாகப் பெற உள்ள நிலையில் இந்தப் பங்குகள் மட்டும் இன்று 0.84 சதவீதம் என 0.55 புள்ளிகள் உயர்ந்து 66.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.