மும்பை: ரயில்வே, வாகனங்கள் என பல துறைகளுக்கு தேவையான உலோக கேஸ்டிங்குகளை உற்பத்தி செய்யும் ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் நிறுவனம் , அமெரிக்க மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன.
அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய மின்சார பயணிகள் வாகன உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு பவர் டிரெய்ன் பாகங்களை வழங்குவதாக ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் ஏப்ரல் 18ஆம் தேதி பங்குச்சந்தையில் சுமார் 4% உயர்ந்தன. பங்கு மதிப்பு ரூ.738.50இல் இருந்து ரூ.763.80 என வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் மின்சார வாகன துறையில் தாங்கள் கால் பதிக்க இருப்பதை இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த மின்சார பயணிகள் வாகன உற்பத்தியாளர் நிறுவனத்தோடு தங்கள் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் நிறுவனம் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலோக வடிவமைத்தல் துறையில் உலக அளவில் சக்தி வாய்ந்த நிறுவனமாக இது விளங்குகிறது.
ஆட்டோமொபைல் ரயில்வே, விவசாய உபகரணங்கள், சுரங்க மற்றும் கட்டுமான பணிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் அனுபவம் பெற்றுள்ள இந்த நிறுவனம் முதன்முறையாக மின்சார வாகன துறையில் கால் பதிக்க இருப்பதை தெரிவித்துள்ளது.
ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் அலுவலகம் ஜாம்செட்பூர், ஜார்க்கண்ட் ஆகிய ஊர்களிலும் அமெரிக்கா மெக்சிகோ மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் இருக்கிறது.
இயந்திர தயாரிப்பு துறையில் முன்னணி வகிக்கும் இந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன்1,87,100 மெட்ரிக் டன் ஆகும். அண்மையில் கூட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை வழங்குவதற்கான 270 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் பெற்றது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications