பங்குச் சந்தையில் ஒரு பென்னி ஸ்டாக் அப்பர் சர்க்கியூட் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பென்னி பங்கு சர்வேஷ்வர் புட்ஸ்.
இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பிராண்டட் மற்றும் பிராண்டட் இல்லாத பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசியை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் நிம்பார்க் ஆர்கானிக் ஸ்டோர்கள் மூலம் ஆர்கானிக் உணவுகளை விற்பனை செய்கிறது.

ஜம்மு அண்டு காஷ்மீரில் தனது பாசுமதி அரிசிக்காக புவிசார் குறியீடு பெற்ற முதல் நிறுவனம் சர்வேஷ்வர் புட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அந்நிறுவனத்துக்கு வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் (ஏபிஇடிஏ) அண்மையில் வழங்கியது.
தற்போது இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் பஞ்சாப் மற்றும் டெல்லி என்சிஆர் பகுதியில் நிம்பார்க் ஆர்கானிக் ஸ்டோர்களை திறக்க உள்ளது. இந்நிறுவனம் 15 பிரத்தியேக விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வருவாய், லாபம் நிலவரமும் திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் சர்வேஷ்வர் புட்ஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் 15.2 சதவீதம் உயர்ந்து ரூ.205.22 கோடியாகவும், நிகர லாபம் 220 சதவீதம் உயர்ந்து ரூ.4.83 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.689 கோடியாகவும், நிகர லாபம் 166.7 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.8 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் டெல்லி என்சிஆரில் வர்த்தகத்தை விரிவுப்படுத்த (நிம்பார்க் ஆர்கானிக் ஸ்டோர்) உள்ளதாக சர்வேஷ்வர் புட்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே அந்நிறுவன பங்கின் விலை அப்பர்சர்க்கியூட் அடித்து புதிய 52 வார உச்சமான ரூ.7.92ஐ தொட்டது.
இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்கின் விலை சிறிது குறைந்து ரூ.7.24ல் முடிவுற்றது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 3.31 சதவீதம் குறைந்து ரூ.7.00ல் வர்த்தகமானது.
2023 மார்ச் 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் சர்வேஷ்வர் பங்கு தனது 52 வார குறைவான ரூ.2.07க்கு சென்றது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 282.60 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,700 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் எப்போதும் இந்த மைக்ரோ கேப் பங்கு மீது ஒரு கவனம் வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!



Click it and Unblock the Notifications