எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 6%கும் மேலாக அதிகரித்து, அதன் 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது.
இந்த நிறுவனம் புதிய பீரிமியம் வருவாய் அதிகரித்துள்ளதாக அறிவித்ததையடுத்து இந்த ஏற்றத்தினை கண்டுள்ளது.
இன்று காலை தொடக்கத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் பங்கு விலையானது, 945.30 ரூபாயாக தொடங்கியது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 923.90 ரூபாயாகும்.
52 வார உச்சம்
இது இண்டிராடே வர்த்தகத்தில் 6.49 சதவீதம் ஏற்றம் கண்டு 983.95 ரூபாய் உச்சத்தினை தொட்டது. எனினும் முடிவில் இந்த பங்கின் விலையானது 5.14% அதிகரித்து 971.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 97,231.78 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் இரண்டு வார சராசரி அளவான 0.96 லட்சம் பங்குகளுடன் ஒப்பிடும்போது 4.51 லட்சம் பங்குகள் கைமாறியதால், பங்குகள் வாங்குவதில் அதிகரிப்பு ஏற்பட்டது.
Array
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, என்எஸ்இ- யில் இதன் இண்டிராடே உச்சமாக 983.75 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலையாக 939 ரூபாயினையும் தொட்டுள்ளது.
இதே பிஎஸ்இயில் இதன் பங்கு விலையானது இண்டிராடே உச்சமாக 983.95 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலையாக 939.50 ரூபாயினையும் தொட்டுள்ளது.
பிரீமிய வளர்ச்சி
எஸ்பிஐ மற்றும் பிஎன்பி பாரிபஸ் கார்டிப் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், புதிய வணிக பிரீமியங்களில் 21% வளர்ச்சியினை பிப்ரவரி மாதத்தில் கண்டு, 22,425 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 18,533 கோடி ரூபாயாக இருந்தது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
இதற்கிடையில் இன்று காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், 584.41 புள்ளிகள் அதிகரித்து, 51,025.48 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 142.20 புள்ளிகள் அதிகரித்து, 15,098.40 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.
More From GoodReturns

ஏடிஎம் கார்டுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி?ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை முழு கைடு இதோ!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications