வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 52 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமாகி கொண்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வரலாற்று உச்சத்தில் காணப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகிறது.
இது தொடர்ந்து சர்வதேச சந்தை ஏற்றம், அந்நிய முதலீடுகள் வரத்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்கள் சந்தைக்கு சாதகமான உள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணத்தினால் சந்தை சரிவினைக் கண்டு வருகிறது.

இன்று காலை தொடக்கத்திலேயே அதாவது ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 116.90 புள்ளிகள் சரிந்து 51 ஆயிரத்து 987 புள்ளிகள் ஆகவும், இதே நிஃப்டி 11.40 புள்ளிகள் சரிந்து 15,302.10 பள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 157.41 புள்ளிகள் சரிந்து 51 ஆயிரத்து 946 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 43.40 புள்ளிகள் சரிந்து 15,270 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி கொண்டுள்ளது. இதற்கிடையில் 641 பங்குகள் ஏற்றத்திலும், 563 பங்குகள் சரிவிலும், 68 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது. இது சந்தையில் முதலீட்டாளர்கள் கிடைத்த லாபத்தை புக்கிங் செய்து வருவதால், இரண்டாவது நாளாக இன்று சரிவை கண்டு வருகிறது.
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைஃப், எஸ்பிஐ, ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், பிபிசிஎல், இந்தஸிந்த் வங்கி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, எண்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், இந்தஸிந்த் வங்கி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 287.46 புள்ளிகள் குறைந்து, 51,816.71 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76.90 புள்ளிகள் குறைந்து, 15,236.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications