மும்பை: கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்றும் ஏற்றத்திலேயே முடிவடைந்தன. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 221 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,469 ஆக முடிவடைந்துள்ளது.
இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,966 ஆக முடிவடைந்துள்ளது.
இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.99 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே 40,000 மேல் நிலை கொண்டிருக்கும் நிலையில், இன்று புதிய உச்சமான 40,606-ஐ தொட்டு முடிவில் சற்று இறங்கி 40,469-ல் முடிவடைந்தது.
இதே சர்வதேச சந்தைகளும் சற்று ஏற்றித்திலேயே உள்ளன, ஐரோப்பிய சந்தையான எஃப்.டி.எஸ்.இ மட்டும் சற்று இறக்கத்தில் இருக்கும் நிலையில் உள்ளது.
இதே யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகள் நல்ல ஏற்றத்திலும், இதே டைட்டன் நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் படு சரிவிலும் காணப்படுகிறது.
இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி, மாருதி சுசூகி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.
இதே சென்செக்ஸ் குறீயீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், பஜாக் ஃபைனான்ஸ், ஓ.என்.ஜி..சி மற்றும் மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
இதே சிப்லா செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 25 சதவிகிதம் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 13 ரூபாய் ஏற்றம் கண்டு, 480 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே கோத்ரேஜ் நிறுவனம் அதன் நிகரலாபம் 28.36% குறைந்து, 413 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 20 ரூபாய் ஏற்றம் கண்டு 741 ரூபாயாக முடிவடைந்துள்ளது.