சவுதி தலைமையிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், தனது உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று இரவு சற்றும் எதிர்பாராத வகையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவு அதிகரித்துக் காணப்பட்டது.
இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தைக்கே திரும்பிவிட்டனர்.
முக்கியமான நிறுவனங்கள்
கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் இதன் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகளவிலான முதலீடுகள் செய்யப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையில் இருந்த முதலீடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் இன்று தொடர் உயர்வான நிலையிலேயே இருந்தது மும்பை பங்குச்சந்தை.
சென்செக்ஸ்
வியாழக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 60 புள்ளிகள் உயர்வுடனேயே துவங்கியது.
தொடர் வர்த்தக உயர்வின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 346.38 புள்ளிகள் உயர்வில் 33,106.82 புள்ளிகளை அடைந்தது. நேற்று இழந்த 33,000 புள்ளிகளை மீண்டும் அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் இன்று 96.70 புள்ளிகள் உயர்ந்து 10,214.75 புள்ளிகளைத் தொட்டது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், என்டிபிசி, டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை சந்தித்தது.