டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்டெல் மத்தியிலான வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் ஏர்டெல், ஏர்டெல் இன்பரா, டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு இன்று அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால் அதிகளவிலான முதலீடு குவிந்தது. இதன் மூலம் நிஃப்டி குறியீடு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை மாலையில் சந்தை கணிப்புகளை உடைத்தெறிந்து வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் மகிழ்வித்த நிலையில், இன்று காலை வர்த்தகம் உயர்வுடனே துவங்கியது.
100 புள்ளிகள்
டிசிஎஸ் முடிவுகள் மற்றும் இன்று வெளியாகும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர் அதிகளவிலான முதலீடு செய்து 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.
இந்த உயர்வு டெலிகாம் நிறுவனங்களின் சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர்வடைந்து வந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 250.47 புள்ளிகள் உயர்ந்து 32,432.69 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர் உயர்வைச் சந்தித்து வந்த நிஃப்டி குறியீடு ஆசிய சந்தையின் சாதகமான சூழ்நிலையில் இன்று புதிய உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 71.05 புள்ளிகள் உயர்வில் 10,.167.45 புள்ளிகளை அடைந்தது.
புதிய உச்சமாக நிஃப்டி 10,190 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.