இன்று காலை சந்தை துவங்கியதில் இருந்து லாபம் அளித்து வந்த மும்பை பங்கு சந்தை குறியீடான சென்ச்கெஸ் சரிவுடன் சந்தையினை முடித்துக்கொண்டது.
சர்வதேச சந்தையில் ஐரோப்பிய சந்தை உயர்ந்து, அமெரிக்க சந்தை சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை இங்கு பார்க்கலாம்.
சந்தை நிலவரம்
சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ச் 382.90 புள்ளிகள் என 1.09 சதவீதம் சரிந்து 34,779.58 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 131.70 புள்ளிகள் லென 1.24 சதவீதம் சரிந்து 10,453.05 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
பொது துறை வங்கி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் நிதி சேவைகள் மற்றும் பார்மா பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் எப்எம்சிஜி துறை மட்டும் லாபம் அளித்துள்ளது.
லாபம் அளித்த பங்குகள்
ஐடிசி, கோல் இந்தியா, விப்ரோ, ஐன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், கோடாக் மஹிந்தரா வங்கி உள்ளிட்டவை லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், மாருதி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ வங்கி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.