அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தை சரிந்து இருந்தாலும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 37,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களும் பங்கு சந்தை உயர்வுக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. எனவே இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 222.23 புள்ளிகள் என 0.61 சதவீதம் உயர்ந்து 36,718.60 புள்ளிகள் எனவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 74.55 புள்ளிகள் என 0.68 சதவீதம் உயர்ந்து 11,084.75 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எனர்ஜி துறையினைத் தவிர்த்து டெலிகாம் எப்எம்சிஜி, அடிப்படை பொருட்கள், தொழிற்சாலை, கேப்பிட்டல் கூட்ஸ், நுகர்வோர் சாதனம், மெட்டல், ரியாலிட்டி மற்றும் மின்சாரத் துறை பங்குகள் எல்லாம் லாபத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
வேதாந்தா, அதானி போர்ட்ஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மாற்றும் மாருதி உள்ளிட்டவை அதிக லாபம் அளித்த பங்குகள் ஆகும்.
நட்டம் அளித்த பங்குகள்
ஹீரோ மொட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, எச்டிஎப்சி, ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் அதிகம் நட்டம் அளித்த பங்குகள் ஆகும்.