சென்செக்ஸ் குறியீடு 185 புள்ளிகள் சரிவு.. கார்பரேட் முடிவுகள் முதலீட்டாளர்களை ஏமாற்றியது..!
கார்பரேட் நிறுவனங்களின் மந்தமான காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சரிவை தழுவியுள்ளது.
கார்பரேட் நிறுவனங்களின் மந்தமான காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சரிவை தழுவியுள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் காலை துவக்கம் முதலே மந்தமான வர்த்தகத்தைச் சந்தித்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இன்றைய சரிவிற்கு ஜனவரி மாத மொத்த விலை பணவீக்கமும் முக்கியக் காரணமாக அமைந்ததுள்ளது.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்குகள் அதிகளவில் குறைந்ததுள்ளதால், வர்த்தகம் தொடர் சரிவு நிலையிலேயே இருந்து இன்றைய வர்த்தகம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 183.75 புள்ளிகள் சரிந்து, 28,155.56 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 67.60 புள்ளிகள் சரிந்து 8,724.70 புள்ளிகளை எட்டி புதன்கிழமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications