அமெரிக்காவில் வர்த்தகக் கொள்கை மாற்றங்களால் வளரும் நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தையில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகளவில் குறைந்தது, இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆசிய சந்தை
இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கினாலும், ஆசிய சந்தையில் ஏற்பட்ட மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் காரணமாகத் தொடர் சரிவை சந்தித்து வர்த்தக முடிவில் சுமார் 220 புள்ளிகள் வரையில் சரிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 219.25 புள்ளிகள் சரிந்து 35,470.35 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 59.40 புள்ளிகள் குறைந்து வர்த்தக முடிவில் 10,762.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
கணிசமான உயர்வு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், வேதாந்தா, கோட்டாக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை கணிசமான வளர்ச்சியை அடைந்தது.
சரிவு
மறுப்புறம் டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, எல் அண்ட் சி, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி ஆகியவை 1.81 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.