இந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஆர்வத்தில் உள்ளனர், இக்காலாண்டில் இரு நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிலான லாபத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய சந்தையில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்தியாவின் அனைத்துக் கார்பரேட் நிறுவனங்களும் அடுத்தச் சில வாரங்களில் தொடர்ந்து காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் லாபம் உள்ளது.
ஐரோப்பிய சந்தை
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்தாலும், ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடு செய்தனர்
மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாக இன்று சென்செக்ஸ் குறியீடு 370 புள்ளிகள் வரை உயர்ந்தது. மேலும் அடுத்தச் சில வர்த்தக நாட்களுக்கு உயர்வுடனே காணப்படும்.
தீபாவளி
வட இந்தியாவில் பொதுவா தீபாவளி பண்டிகையன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வார்கள், இதற்காக ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று சிறப்பு வர்த்தக வாயில் திறக்கப்படும்.
இதேபோல் இந்த வருடமும் திறக்கப்படுகிறது, ஆகையால் அடுத்த வாரம் முழுக்க வர்த்தகச் சந்தை உயர்வுடனே காணப்படும்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 348.23 புள்ளிகள் உயர்வில் 32,182.22 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 111.60 புள்ளிகள் உயர்ந்து 10,096.40 புள்ளிகள் உயர்ந்தது.
அதிக முதலீடு
வியாழக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ், சன் பார்மா, ஹின்டால்கோ, பார்தி இன்பராடெல் ஆகிய நிறுவனங்கள் மீது அதிகளவில் முதலீடு செய்தனர்.
பணவீக்கம் அளவீடு
மேலும் இன்று மாலை நேரத்தில் இந்தியாவின் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்க அளவீடுகள் வெளியாக உள்ளது. இதன் தாக்கம் கண்டிப்பாகச் சந்தையில் இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications