நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் தான் தொடங்கியது. அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகிறது.
இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 917.24 புள்ளிகள் குறைந்து, 50,122.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 267.80 புள்ளிகள் குறைந்து, 14,829.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. தொடக்கத்தில் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் பின், 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக மாருதி சுசூகி, கோல் இந்தியா, என்டிபிசி, ஐஓசி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, சன் பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச சந்தைகள் சரிவு
முந்தைய அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் S&P/ ASX200 2$ மேலாக சரிவிலும், இதே ஜப்பானின் நிக்கி 1.8% சரிந்தும், ஹாங்காங்கின் ஹேங் ஷேங் 1.69% சரிவிலும் காணப்பட்டது.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 815.17 புள்ளிகள் குறைந்து, 50,224.14 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 227.70 புள்ளிகள் குறைந்து, 14,869.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இது இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் புராபிட் புக்கிங்க் காரணத்தாலும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.