இந்திய பங்குச் சந்தை டிசம்பர் 8 திங்கட்கிழமை பெரும் சரிவை சந்தித்த நிலையிஸ், டிசம்பர் 9ஆம் தேதியும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 609.68 புள்ளிகள் (0.71 சதவீதம்) குறைந்து 85,102.69இல் முடிந்தது, நிஃப்டி 225.90 புள்ளிகள் (0.86 சதவீதம்) சரிந்து 25,960.55ஆக இருந்தது. இது இரண்டு மாதங்களில் வந்த மிகப்பெரிய சரிவாகும்.
ஆனால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வர்த்தகம் தொடங்கியதும் சரிவு தொடர்ந்தது - சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்து 84,400க்கு கீழேயும், நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 25,750க்கு கீழ் வர்த்தகமாகிறது. ஆனால் 2 மணிநேரத்தில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 328 புள்ளிகள் சரிவுடன் 84,774.09 புள்ளிகளில் முடிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 105 புள்ளிகள் சரிந்து 25,856.20 புள்ளிகளில் முடிந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில், ஏசியன் பெயின்ட்ஸ் மோசமான சரிவான 3.35 சதவீத அளவீட்டை பதிவு செய்துள்ளது. இதோடு டிசிஎஸ், மஹிந்திரா, ஹெச்சிஎல், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராசெக், டாடா மோட்டார்ஸ், மாருதி ஆகியவை அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது.
இந்த சரிவுக்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளது, இந்த காரணங்களை முழுமையாக புரிந்துக்கொள்வதன் மூலம் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் ஏற்படும் சரிவு எப்போது நிலைபெறும் என்பது தெரிய வரும்.
ஃபெட் வட்டி குறைப்பு
டிசம்பர் 10 அன்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவுகளை அறிவிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் உள்ளனர். பெடரல் ரிசர்வ் சுமார் 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைக்க 90 சதவீத வாய்ப்புடன் உள்ளது. ஆனால் பெடரல் ரிசர்வ் வங்கியின் பேச்சு ஹாக்கிஷ் தொனியில் இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த வட்டி விகித குறைப்பும், கொள்கை முடிவுகளும் டாலரை வலுப்படுத்தி, ரூபாய் மதிப்பை மோசமாக்கலாம். இது ரீடைல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிகம் பாதிக்கும் வகையில் இருக்கும் என்ற அச்சமே, இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
உலக சந்தைகள் சரிவும்
பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித முடிவுகளின் அச்சம் ஆசிய சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும்போதே மோசமான சரிவுடன் தொடங்கின, இதில் இந்திய சந்தையின் சரிவு அதிகமாக உள்ளது.
அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம்
டிசம்பர் 8ஆம் தேதி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) ரூ.656 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று தங்களது முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதனால் ரூபாய் மதிப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு நேற்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DII) ரூ.2,542 கோடி முதலீடு செய்து ஆதரவளித்தாலும், FII விற்பனை பங்குச்சந்தை சரிவை மோசமாக்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு பாதிப்பு
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) வெளியேறிய காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்று 10 காசுகள் சரிந்து 90.15ஆக உள்ளது, இது புதிய உச்சத்தை நெருங்குகிறது. ரூபாய் மதிப்பு குறைந்த காரணத்தால் வழக்கத்தை காட்டிலும் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மத்தியில் அதிகளவிலான டாலர் தேவை உருவாகியுள்ளது. இதனால் ரூபாய் மதிப்பு கூடுதல் தாக்கத்தை எதிர்கொள்கிறது.
நிஃப்டி எக்ஸ்பயரி
செவ்வாய்க்கிழமை நிஃப்டி வாராந்திர டெரிவேட்டிவ்ஸ் (F&O) எக்ஸ்பயரி காரணமாக ஏற்ற இறக்கம் அதிகரித்தது. டிசம்பர் 9 எக்ஸ்பயரி ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகர்கள் நிலைகளை மாற்றியதால் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இது சந்தையை மேலும் பதற்றமாக்கியது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications