சென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி இரண்டு சாதனை உச்சங்களைத் தொடுவதில் இருந்து விலகி இன்று நட்டத்துடன் முடிவடைந்துள்ளன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தை சரிவு போன்ற காரணங்கள் இந்திய பங்கு சந்தையில் உயர்வினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரிவுடன் முடிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு, எஸ்பிஐ காலாண்டு நட்டம், ஜெட் ஏர்வேஸ் காலாண்டு அறிக்கை வெளியீட்டைத் தள்ளி வைத்தது போன்றவையும் பங்கு சந்தை சரிவுக்கான காரணங்களாக உள்ளன.

இன்றைய சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரம்

வாரத்தின் இறுதி சந்தை நாளான இன்று சென்செக்ஸ் 155.14 புள்ளிகள் என 0.41 சதவீதம் சரிந்து 37,569.23 புள்ளிகளாகவும், நிப்டி 41.20 புள்ளிகள் என 0.36 சதவீதம் சரிந்து 11,429.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது.

துறை வாரியான நிலவரம்

துறை வாரியான நிலவரம்

மெட்டல், அடிப்படை பொருட்கள், யூட்டிலிட்டிஸ், கேப்பிட்டல் கூட்ஸ், தொழிற்சாலைகள் துறை பங்குகள் நட்டம் அளித்த நிலையில் நுகர்வோர் சாதனங்கள், ஐடி, டெக் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபம் அளித்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

லாபம் அளித்த நிறுவனங்கள்

ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்தரா & மஹிந்தரா, டிசிஎஸ், ஐடிசி, கோடாக் வங்கி, பார்தி ஏர்டெல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த நிறுவனங்கள்

நட்டம் அளித்த நிறுவனங்கள்

டாடா ஸ்டீல், எல்&டி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, சன் பார்மா, எஸ்பிஐ வங்கி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex dives 155 points, Nifty settles at 11429

Sensex dives 155 points, Nifty settles at 11429
Story first published: Friday, August 10, 2018, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X