200 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடகாவில் ஜேடிஎஎஸ் கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் பிஜேபியின் 2019ஆம் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேற வருகின்றனர்.

 பிஜேபி எபெக்ட்

பிஜேபி எபெக்ட்

செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பிஜேபி முன்னிலை வகித்த நிலையில் உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டின் மூலம் சென்செக்ஸ் காலை வர்த்தகத்திலேயே சுமார் 400 புள்ளிகள் வரையில் உயர்ந்து. இன்று இதன் நிலை தலைகீழாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது.

புதன்கிழமை காலை வர்த்தகம் துவக்கம் முதலே சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையில் சரிந்தது.

 

 வட கொரியா, தென் கொரியா

வட கொரியா, தென் கொரியா

இதுமட்டும் அல்லாமல் மீண்டும் வட கொரியா, தென் கொரியா இடையிலான பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் ஆசிய சந்தையில் இன்று மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆசிய சந்தை
 

ஆசிய சந்தை

ஆசிய சந்தையில் 11 மணி நிலவரத்தின் படி சீனா 0.20 சதவீதமும், ஹாங்கார் 0.18 சதவீதமும், இந்தியா சந்தை 0.68 சதவீதமும், ஜப்பான் 0.35 சதவீதமும், தைவான் 0.01 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 11 மணியளவில் 205 புள்ளிகள் சரிவில் 35,338.01 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 74.65 புள்ளிகள் சரிந்து 10,727.20 புள்ளிகளையும் அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex dives 230 points, Nifty below 10,750

Sensex dives 230 points, Nifty below 10,750
Story first published: Wednesday, May 16, 2018, 11:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X