இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம், அமெரிக்கா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் போன்ற காரணங்களால் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி சுமார் 4 சதவீதம் உயர்ந்தது. வரும் நாட்களிலும் பங்குச் சந்தைகளிலும் இந்த ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நிஃப்டி
ஆனால் இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 24,800 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. பங்குச் சந்தையின் திடீர் சரிவால் முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் செயல்பட்டது, பலவீனமான இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சில முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் 2 முதல் 3 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டது.
அதானி போர்ட்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அதானி போர்ட்ஸ், டெக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் சன்பார்மா ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது. பங்குச் சந்தையில் ஐடி மற்றும் வங்கி துறைகளை சேர்ந்த பங்குகள் பலத்த அடி வாங்கின.
மதியம் 1 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,246.44 புள்ளிகள் குறைந்து 81,183.46 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 311.25 புள்ளிகள் சரிந்து 24,613.45 புள்ளிகளில் இருந்தது.
கராச்சி பங்குச் சந்தை
அதேசமயம், பாகிஸ்தானில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து 2 வது வர்த்தக தினமான இன்று கராச்சி பங்குச் சந்தையின் குறியீட்டு எண் KSE 100 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. தற்போது கராச்சி பங்குச் சந்தை இன்டெக்ஸ் அதன் இதுவரை இல்லாத புதிய உச்சத்துக்கு அருகில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து நேற்று கராச்சி பங்குச் சந்தை 9.4 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே வருஷத்தில் 276% லாபம் கொடுத்த சிகரெட் கம்பெனி.. காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications