மும்பை: வட கொரியாவின் சமீபத்திய அணுசக்தி பரிசோதனையினை அடுத்து, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் அடைக்கலம் தேடுவதைத் தூண்டியதனால் ஆசிய சந்தைகளில், திங்களன்று இந்திய பங்குகள் சரிந்தன.
சென்செக்ஸ்
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.60 சதவீதம் அதாவது 189.98 புள்ளிகள் சரிந்து 31,702.25 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
நிப்டி
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.62 சதவீதம் அதாவது 61.55 புள்ளிகள் சரிந்து 9,912.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான அறிக்கை
மிட்கே பங்குகள் காலையில் ஓர் அளவிற்கு நட்டத்தினைத் தவிர்த்து வந்த போதிலும் சந்தை முடியும் போது சரிந்தே முடிந்தது. அதே நேரம் ஆட்டோமொபைல், வங்கி, பவர், எப்எம்சிஜி, இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் மற்றும் ஐடி துறை பங்குகள் இன்று அதிகளவில் சரிந்தது.
டாப் 5 பங்குகள்
பாம்பே டையிங் (+9.96%), டிவி18 பிராட்காஸ்ட் (+7.16%), ரேமண்ட் (+5.48%), ஸ்ரீராம் ஃபினான்ஸ் (+4.94%), சன் டிவி நெட்வொர்க் (+4.88%)
நட்டம் அடைந்த பங்குகள்
அதானி பவர் (-5.67%), ஜஸ்ட் டயல் (-4.47%), ரிலையன்ஸ் காப்பிட்டல் (-4.42), அதானி எண்ட்ர்பிரைசஸ் (-4.42%), இந்தியன் ஆயில் கார்ப் (-4.31%)