இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கம் வராக்கடன் அளவுகள் பன்னாட்டு முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கும் இவ்வேளையில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் பியூச்சர் 340 புள்ளிகளுக்கும் அதிகமான அளவில் சரிந்து அதிகப்படியாக 2 சதவீதம் வரையில் சரிந்தது.
இதன் வாயிலாக இன்று ஆசிய சந்தையில் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது.
ஆசிய சந்தை
மார்ச் 7ஆம் தேதி வர்த்தகத்தில் அமெரிக்காவில் டாவ் ஜோன்ஸ் பியூச்சர் சுமார் 24,419 புள்ளிகள் வரையில் சரிந்து பன்னாட்டு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதன் காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தனர்.
மும்பை பங்குச்சந்தை
டாவ் ஜோன்ஸ் பியூச்சர் மற்றும் ஆசிய சந்தையின் வீழ்ச்சி காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை முதல் தொடர் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இன்று புதிய முதலீடுகளை எதுவும் செய்யவில்லை.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 284.11 புள்ளிகள் சரிந்து 33,033.09 புள்ளிகளை அடைந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 95.05 புள்ளிகள் சரிந்து 10,154.20 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
புதன்கிழமை வர்த்தகத்தில் வங்கி, எண்ணெய் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, மாருதி, பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டாக் பாங்க், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது.