வர்த்தகப் போர்.. இந்திய முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்திய சீனா, அமெரிக்கா..!

சீனா மற்றும் அமெரிக்க நாட்டுகள் மத்தியில் வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயம், மற்றும் இத்தாலியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற அரசியல் போன்றவை உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உருவாகியுள்ளது.

இதன் பாதிப்புகள் முதலில் பங்குச்சந்தையைத் தாக்கும் என்பதால் ஆசிய முதலீட்டாளர்கள் இன்று கவனமாகத் தங்களது முதலீட்டைப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றி யென் மற்றும் தங்கம் மீது திருப்பினர்.

இதனால் ஆசிய பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்றது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

சீனா மற்றும் அமெரிக்க நாட்டுகள் மத்தியில் வர்த்தகப் போர் வந்தால் என்ன ஆகும் என்பதை ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் பார்த்துள்ள நிலையில், இன்று வர்த்தகத் துவக்கம் முதலே ஆசிய சந்தையின் தாக்கத்தின் வாயிலாகச் சுமார் சரிவிலேயே வர்த்தகம் துவங்கியது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு மும்பை பங்குச்சந்தையில் கணிசமான உயர்வு இருந்தாலும், லாபகரமான நிலைக்கு உயரவில்லை.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300.16 புள்ளிகள் வரையில் சரிந்து 33,746.78 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 99.50 புள்ளிகள் சரிந்து 10,358.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, டிசிஎஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது, அதேபோல் மஹிந்திரா, எஸ்பிஐ, கோட்டாக் வங்கி, என்டிபிசி ஆகியவை கணிசமான வர்த்தகத்தை அடைந்துள்ளது.

சண்டை முற்றியது..!

சண்டை முற்றியது..!

இந்தியா

இந்தியா

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+