வாரத்தின் முதல் நாளான இன்று காலை தொடக்கத்திலேயே சந்தை புதிய உச்சத்தில் தான் தொடங்கியது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்து, 44,232 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 95 புள்ளிகள் அதிகரித்து, 12,954 ஆகவும் தொடங்கியது. .

இந்த நிலையில் அப்போது 1,013 பங்குகள் ஏற்றத்திலும், 325 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக மாற்றமில்லாமல் 74.13 ரூபாயாக தொடங்கியது.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள வங்கி மற்றும் கன்சியூமர் குறியீடுகள் தவிர அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, இந்தஸ்இந்த் வங்கி, கெயில், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, இந்தஸ்இந்த் வங்கி, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, எம் &எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் காலையில் ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 194.90 புள்ளிகள் அதிகரித்து, 44,077.15 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 67.50 புள்ளிகள் அதிகரித்து, 12,926.50 ஆகவும் முடிவடைந்துள்ளது. இதில் 1,636 பங்குகள் ஏற்றத்திலும், 1133 பங்குகள் சரிவிலும், 178 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்று சந்தை சாதகமாக முடிவடைந்துள்ளதாலும், இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி வரவுள்ளதால், சந்தை பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை காணலாம். ஆக இதனையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய செய்திகள் சாதகமாக வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனாவால் சந்தை ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications