வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும் இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவிலும் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக தற்போது சென்செக்ஸ் 257 புள்ளிகள் அதிகரித்து, 51,039.31 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 115.35 புள்ளிகள் அதிகரித்து 15,097.35 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து 1755 பங்குகள் ஏற்றத்திலும், 1149 பங்குகள் சரிவிலும், 169 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, யுபிஎல், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், லார்சன், டைட்டன் நிறுவனம், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஒஎன்ஜிசி, என் டிபிசி, ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், லார்சன், கோடக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம், உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதனையடுத்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து 72.42 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 72.30 ரூபாயாக தொடங்கியிருந்தது.