மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மூன்று மாத உச்சத்துடன் 31,892.23 புள்ளிகளை எட்டியது. இந்திய பொருளாதார வளர்ச்சியின் சரிவு இருந்தாலும் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அக்டோபர் மாதம் முதல் குறைக்கும் என்பது சந்தைக்குச் சாதமாக அமைந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.57 சதவீதம் அதாவது 56.5 புள்ளிகள் உயர்ந்து 9,974.40 புள்ளிகளுடன் இன்றைய சந்தையை முடித்துக் கொண்டது.
சென்செக்ஸ் 0.51 சதவீதம் அதாவது 161.74 புள்ளிகள் உயர்ந்து 31,892.23 புள்ளிகளுடன் இன்றைய பங்கு சந்தை முடிந்தது.
வராந்திர நிலை
இந்த வாரத்தில் தேசிய பங்குச் சந்தை 1.2 சதவீத வளர்ச்சியையும், மும்பை பங்கு சந்தை 0.9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன.
இன்றைய சந்தையின் நிலை
மும்பை பங்குச் சந்தையினைப் பொறுத்தவரையில் ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் ஹெல்த்கேர் துறை பங்குகள் நல்ல லாபத்தினை அளித்துள்ளன.
அதே நேரம் வீட்டு உபயோக பொருட்கள், ஐடி மற்றும் டெக் துறை பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
டாக்டர் ரெட்டிஸ் (+ 9.75%), ஏஷியன் பெயின்ட்ஸ் (-3.97%), பஜாஜ் ஆட்டோ (-3.92%), டாடா மோட்டார்ஸ் (-3.74%), டாடா ஸ்டீல் (-1.87%)
நட்டம் அளித்துள்ள பங்குகள்
டிசிஎஸ் (-1.34%), பார்தி ஏர்டெல் (-1.26%), பவர் கிரிட் (-1.17%), ஹெச்டிஎப்சி (-0.92%) மற்றும் விப்ரோ (-0.75%)