அமெரிக்க மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தை ஜனவரி 30-31ஆம் தேதிகளில் நடத்துகிறது. இக்கூட்டத்தில் பெடரல் நிர்வாகம் வட்டி விகிதத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதனால் ஆசிய சந்தை முதல் ஐரோப்பிய சந்தை வரையில் அனைத்து முன்னணி வர்த்தகச் சந்தையும் இன்று சரிவுடனே இருக்கிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்திய சந்தை
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி எடுக்க உள்ள முடிவு மற்றும் சர்வதேச நாடுகளில் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை இன்று மும்பை பங்குச்சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகம் துவங்கும்போதே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது.
தொடர்ந்து உயர்வைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் தினசரி உயர்வைச் சந்தித்து வந்த நிலையில் இன்று வர்த்தகத் துவக்கத்திலேயே 200 புள்ளிகள் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியது.
சென்செக்ஸ்
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 249.52 புள்ளிகள் சரிவை சந்தித்து 36,033.73 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் தொடர் சரிவில் 80.75 புள்ளிகள் சரிவை சந்தித்தது. இதனால் இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி 11,049.65 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்களில் அதிகப்படியான நிறுவனங்கள் சரிவை சந்தித்தது. இதில் ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவை 2.20 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.