மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 15 வரையிலான காலம் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் இருந்து மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். அதேபோல் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் 45,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்திருந்தனர்.

 

அதேபோல் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு முதலீட்டு சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.

 
மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.88 புள்ளிகள் சரிந்து 35,548.26 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 17.85 புள்ளிகள் சரிந்து 10,799.85 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை அடைந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ, மாருதி, என்டிபிசி, இன்டஸ்இந்த் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை அடைந்தது.

இதனை தொடர்ந்து வேதாந்தா, கோட்டாக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends down 74 points

Sensex ends down 74 points - Tamil Goodreturns | மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Monday, June 18, 2018, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X