150 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் நடந்த மோசடிகளின் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு தொடர் முதலீடுகளின் வாயிலாக 150 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.

 

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 141.27 புள்ளிகள் உயர்ந்து 33,844.86 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 37.05 புள்ளிகள் உயர்ந்து 10,397.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

 
 150 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

டாடா குழுமத்தின் தலைவராகச் சந்திரசேகரன் பதவியேற்று 1 வருடம் முழுமை அடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 3.33 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐடிசி நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்தது முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதன் பின் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends higher by 141 points

Sensex ends higher by 141 points - Tamil Goodreturns | 150 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Wednesday, February 21, 2018, 19:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X