பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் நடந்த மோசடிகளின் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு தொடர் முதலீடுகளின் வாயிலாக 150 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 141.27 புள்ளிகள் உயர்ந்து 33,844.86 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 37.05 புள்ளிகள் உயர்ந்து 10,397.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
டாடா குழுமத்தின் தலைவராகச் சந்திரசேகரன் பதவியேற்று 1 வருடம் முழுமை அடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 3.33 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐடிசி நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்தது முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதன் பின் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.