ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார், அபேவின் சுற்றுப்பயணத்தில் முக்கியப் பணியான புல்லட் ரயில் திட்டத்தின் துவங்க விழா முடிவடைந்த நிலையில், இரு நாடுகள் மத்தியில் சுமார் 15 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
15 ஒப்பந்தங்கள்
இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் மற்றும் நட்புறவு மேலும் வலிமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 15 ஒப்பந்தங்கள் வர்த்தக ரீதியாக மட்டும் அல்லாமல், பிராந்தி மற்றும் சர்வதேச பிரச்சனைகளைக் கையாளு முக்கிய ஒப்பந்தங்களாகும். இதனுடன் பாதுகாப்பு மற்றும் அணு சக்தி குறித்த ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.
நம்பிக்கை
புல்லட் ரயில், ஜப்பான் இந்தியா மத்தியிலான ஒப்பந்தங்கள் இந்தியாவின் வர்த்தக வளர்ச்சியில் முதலீட்டாளர்களுக்கும் கூடுதலான நம்பிக்கையை அளித்துள்ளது.
முதலீடு
இதனால் இன்று மும்பை பங்குச்சந்தை கணிசமான முதலீட்டை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 55.52 புள்ளிகள் உயர்ந்து 32,241.93ப புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடு இன்று சில சரிவைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் லாபகரமான நிலையில் முடிவடைந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 7.30 புள்ளிகள் உயர்ந்து 10,086.60 புள்ளிகளை அடைந்துள்ளது
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் விப்ரோ, கோட்டாக் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, மஹிந்திரா, பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.