இந்திய பங்குச்சந்தையில் இன்று கடுமையான சரிவு பதிவு செய்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதன் காரணமாகப் பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து சரிவிலேயே இருந்தது.
S&P BSE Sensex இன்று காலை உயர்வுடன் தொடங்கினாலும், 73,467.73 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக முடிவில் 732 புள்ளிகள் சரிந்து 73,878.15 புள்ளிகளை எட்டியது. அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 172.35 புள்ளிகள் சரிந்து 22,475 புள்ளிகளை தொட்டு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

இதனால் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தையில் அனைத்து துறை வாரியான குறியீடுகளும் இன்று சரிவில் இருந்தது. இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தை மூலதன மதிப்பீடு 2.53 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டனர்.
மேலும் இந்திய பங்குச்சந்தையின் ஆபத்து அளவுகோலான இந்தியா விக்ஸ் (India VIX) குறியீடும் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்ந்து, 11% அதிகரித்துக் கிட்டத்தட்ட 15 ஐ எட்டியுள்ளது முதலீட்டாளர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
இன்று காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை, ரிலையன்ஸ், எல்&டி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட அதிகப்படியான விற்பனை காரணமாகச் சரிய துவங்கியது.
முன்னணி நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யின் மோசமான சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
பங்குச்சந்தை உணர்வுகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் காரணமாக, பங்குச்சந்தை நிலையற்ற தன்மையை அளவிடும் இந்தியா விக்ஸ் குறியீடு 12% க்கும் மேல் உயர்ந்து 15.12 ஐ எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் குறைவான சரிவை பதிவு செய்தது. இதில் அதிகப்படியான 0.75 சதவீதமும், குறைவான அளழாக 0.11 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், நெஸ்லே, மாருதி, எல் அண்ட் டி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து இன்றைய மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது.
More From GoodReturns

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications