1,478 புள்ளிகள் வீழ்ச்சியில் சென்செக்ஸ்.. படு வீழ்ச்சி கண்ட ரூபாய்.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்றே இந்திய பங்கு சந்தை சரிவுடன் ஆரம்பித்துள்ளது. அதிலும் கொஞ்சம் நஞ்சம் வீழ்ச்சியல்ல.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் (10 மணியளவில்) 1,478 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,098 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 414 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,574 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.97 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று வரையில் 38 பேர் இதனால் தாக்கம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தாக்கம் காரணமான, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான பதற்றம் காணப்படுகிறது.

 தவிர்க்கும் முதலீட்டாளர்கள்

தவிர்க்கும் முதலீட்டாளர்கள்

இதனால் அதிகளவிலான முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். சொல்லப்போனால் போட்ட முதலீடுகளையே கூட வெளியே எடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஆசிய நாணயங்களிலேயே ரூபாய் படு வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 74 ரூபாயை தொட்டுள்ளது.

விலை குறைவு

விலை குறைவு

ஏன் ரூபாயை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் கச்சா எண்ணெய் விலை தான் சர்வதேச சந்தையில் 30% வீழ்ச்சி கண்டுள்ளதே. அப்புறம் எப்படி ரூபாய் இவ்வளவு வீழ்ச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் இது பணவீக்கத்தினை கட்டுபடுத்த உதவுமே என்று கேட்பது புரிகிறது. நமக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது நல்ல விஷயம் தான்.

இது தான் முக்கிய வணிகமே

இது தான் முக்கிய வணிகமே

ஆனால் இதையே முக்கிய வணிகமாக கொண்டுள்ள நாடுகளின் வர்த்தகம் என்ன ஆவது. அவர்களின் பொருளாதாரம் என்ன தான் ஆவது. இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி காண வழிவகுக்குமே. என்ற பதற்றத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி

அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி

ஒரு புறம் சவுதி அரேபியாவின் அதிரடி முடிவால் சர்வதேச சந்தைகளும் படு வீழ்ச்சி கண்டுள்ளன. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் உள்ளது. சொல்லப்போனால் இந்திய சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. எண்ணெய் விலை வீழ்ச்சியால் விலையை குறைக்க நேரிடுமே. இதனால் லாபம் குறையுமே என்ற நிலையில், ஓஎன்ஜிசி, வேதாந்தா, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது. இதே எபிபிசிஎல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் சற்று ஏற்றத்துடனும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex fall near 1,500 points, nifty trade below 10,600

Nifty trade in seven month low, sensex also fall near 1,500 points
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X