கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் தற்போது குழப்பம் நிலவி வரும் நிலையில் பிஜேபி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏ-க்களை 100 கோடி ரூபாயும், அமைச்சர் பதவி கொடுப்பதாக விலை பேசி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி ரெசார்ட் அரசியல் நடத்த முடிவு செய்துள்ளது. கூவத்தூரில் நடந்ததே அதே தான். கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி பிஜேபியின் 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் முதலீட்டைக் குறைத்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் மீண்டும் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையில் கருத்து வேறுபடு நிலவி வரும் நிலையில் ஆசிய சந்தையிலும் மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 156.06 புள்ளிகள் சரிந்து 35,387.88 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 60.75 புள்ளிகள் சரிந்து 10,741.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.