மும்பை பங்குச்சந்தையில் இன்று முதலீட்டாளர்களுக்கு மிகவும் மோசமான வர்த்தக நாளாக அமைந்துள்ளது. வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்தில் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் வரையில் சரிந்து சுமார் 6.5 லட்சம் வகையிலான சந்தை முதலீட்டைச் சந்தை முதலீட்டாளர்கள் இழந்தனர்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை துறையைப் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கணிப்புகள் நிலவி வருகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
இதன் எதிரொலியாக அன்னிய முதலீட்டாளர்கள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இன்றைய மோசமான சரிவின் காரணமாக முதலீட்டாளர் 2020 மார்ச் சரிவை போல் மீண்டும் மாபெரும் சரிவை இந்தியா எதிர்நோக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்தது. இதன் பின்பும் தொடர் சரிவின் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 3.7 சதவீதம் வரையில் சரிந்தது. இந்த மாபெரும் வீழ்ச்சியில் முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
3.44 சதவீத சரிவு
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,707.94 புள்ளிகள் சரிந்து மொத்தம் 3.44 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தக முடிவில் 47,883 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
மேலும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று வங்கி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது. இதில் குறிப்பாக இண்டஸ்இந்த் 8.6 சதவீதம் வீழ்ச்சி, பஜாஜ் பைனான்ஸ் 7.39 சதவீதம், எஸ்பிஐ வங்கி 6.87 சதவீதம் என மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
ஐடி துறை வீழ்ச்சி
கடந்த வாரம் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்க ஐடி துறையும், இன்று சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய 1 சதவீதம் முதல் 3.3 சதவீதம் வரையில் சரிவை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி நிறுவனம் மட்டுமே 4.83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
நிப்டி குறியீடு
இதைத் தொடர்ந்து நிப்டி குறியீடு சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே தொடர் சரிவை பதிவு செய்த காரணத்தால் அதிகளவிலான சரிவடைந்தது. இதன் மூலம் வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 524.05 புள்ளிகள் வரையில் சரிந்து 14,310.80 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications