மும்பை: இந்திய பங்கு சந்தைகள் நடப்பு ஆண்டு முழுவதும் ஏற்ற இறக்கம் கண்ட நிலையில், 2019ம் ஆண்டின் கடைசி நாளான இன்றும் வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் குறிட்டெண் சென்செக்ஸ் 171 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 41,386 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 54 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,201 ஆகவும் வர்த்தகமாகியும் வருகிறது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல உச்சத்தில் இருந்தாலும், சற்றே ஆறுதல் தரும் விதமாக கொஞ்சம் மதிப்பு அதிகரித்து 71.27 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த இரு குறியீடுகளில் உள்ள துறை சார்ந்த அனைத்து இண்டெக்ஸ்களும் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ஐடி, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் படு வீழ்ச்சியடைந்தும் காணப்படுகின்றன.
இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகளில் கெயில், கோல் இந்தியா, பார்தி இன்ஃப்ராடெல், பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் பேங்க், டாடா ,மோட்டார்ஸ், கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் பேங்க், என்.சி.பி.சி, டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினாராகவும், இதே டெக்ல் மகேந்திரா, இண்டஸ்இந்த் பேங்க், ரிலையன்ஸ், கோட்டக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.
2020ம் ஆண்டில் பெரும்பாலும் முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்படும் துறைகள் மற்றும் பங்குகள் இறங்குவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக அப்படி ஒரு வருடமாகத் தான் 2020 இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நடப்பு 2019ம் ஆண்டில் ரியால்டி செக்டார் 24 சதவிகிதமும், இதே கன்சியூமர் அன்ட் டியூரபிள் 21 சதவிகிதமும், வங்கிகள் 20 சதவிகிதமும், ஐடி துறைகள் 10 சதவிகிதமும் ஏற்றம் கண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுவே மெட்டல் துறை 13 சதவிகித வீழ்ச்சியுடனும், கேப்பிட்டல் குட்ஸ் அன்ட் ஆட்டோ துறை 11 - 12 சதவிகித வீழ்ச்சியுடனும் காணப்பட்டது.