மும்பை: பாராளுமன்றத்தில் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை எதிர்கட்சிகள் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த நிலையிலும் இந்திய பங்கு சந்தை லாபத்துடனேயே முடிந்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகள் மந்தமாக வர்த்தகமான நிலையில் ஆசிய சந்தைகள் ஓர் அளவிற்கு லாபத்தினையே அளித்துள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் இன்று சரிந்து இருந்த நிலையில் பங்கு சந்தையின் நிலவரத்தினை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
சென்செக்ஸ்
சந்தை நேர முடிவில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 145.14 புள்ளிகள் என 0.40 சதவீதம் உயர்ந்து 36,496.37 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 53.10 புள்ளிகள் என 0.48 சதவீதம் சரிந்து 11,010.20 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஐடி, டேக், டெலிகாம் மற்றும் ஹெல்த் கேர் துறை சார்ந்த பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக லாபம் அளித்த நிலையில், அடிப்படை பொருட்கள், நுகர்வோர் சரக்கு மற்றும் சேவைகள், ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
சன் பார்மா, இன்போசிஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல்&டி பங்குகள் லாபம் ஈட்டியுள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, ஹீரோ மோட்டொ கார்ப், ஓஎன்ஜிசி, கோடாக் வங்கி, யெஸ் வங்கி நட்டம் அளித்துள்ளன.