சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 11,250 புள்ளியை தொட்டும் சாதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுச் சாதனைப் படைத்துள்ளன.கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் உயர்வு, சர்வதேச சந்தையில் உள்ள மந்தமான நிலை போன்றவை இந்திய சந்தையில் அதிக முதலீடுகளைப் பெற வைத்துள்ளன.

ஆசிய கரன்சிகள் போன்றே இந்திய ரூபாய் மதிப்பும் சரியும் அபாயத்தில் உள்ளது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் வெளியேற்றம் போன்ற காரணங்கள் சந்தியில் தாக்கத்தினை எப்படி ஏற்படுத்தியுள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

 சந்தை நிலவரம்

சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 352.21 புள்ளிகள் என 0.95 சதவீதம் உயர்ந்து 37,336.85 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 111.05 புள்ளிகள் என 0.99 சதவீதம் உயர்ந்து 11,278.35 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டௌ இருந்தது.

துறை வாரியான நிலவரம்

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஐடி துறை பங்குகளைத் தவிர எப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள், மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, எனர்ஜி துறை எல்லாம் லாபம் அளித்து இருந்தன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

லாபம் அளித்த நிறுவனங்கள்

ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோமொபைல், ஆக்சிஸ் வங்கி பங்குகள் எல்லாம் லாபம் அளித்தன.

நட்டம் அளித்த பங்குகள்

நட்டம் அளித்த பங்குகள்

பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, டிசிஎஸ், மாருதி மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் நட்டம் அளித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex gains 350 points, Nifty touches 11,250 points

Sensex gains 350 points, Nifty touches 11,250 points
Story first published: Friday, July 27, 2018, 16:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X