பங்குச்சந்தையில் இன்று காலை முதல் தொடர்ந்து ஏறுமுகம் தான், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,619 புள்ளிகள் அதாவது 2.16% உயர்ந்து 76,693 என்ற புதிய உச்சத்தை தொட்டு முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடும் 469 புள்ளிகள் அதாவது 2.05% உயர்ந்து 23,290 என்ற புள்ளியில் நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 76,795.31 புள்ளிகள் உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. இதேபோல் 23,320.20 புள்ளிகள் உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது.

இன்று கவனிக்கும் படியாக ஜூன் 4ஆம் தேதி ஏற்பட்ட இழப்புகளை இரு குறியீடுகளும் முழுமையாக ஈடுகட்டி விட்டன.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு இன்று ரூ.7.38 லட்சம் கோடி உயர்ந்து ரூ.423.27 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த 3 நாட்களில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.423.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம், முதலீட்டாளர்களின் செல்வம் சுமார் ரூ.28 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
ஜூன் 4 ஆம் தேதி சென்செக்ஸ் வரலாறு காணாத விதமாக 6100 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதன் காரணமாக, 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் சுமார் ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பைச் சந்தித்ததாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழக்க மிக முக்கியமான காரணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்துத் தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் கொடுத்த ஆலோசனைகள் தான் என ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்வி எழுப்பியும், இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC - Joint Parliamentary Committee) விசாரணை கோரினார் ராகுல் காந்தி.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் அதே 6.5 சதவீதத்தை அறிவித்த பின்பு, 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.2 சதவீதம் வரையில் உயரும் என ஆர்பிஐ அறிவிப்பு முதலீட்டாளர் மத்தியில் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தை அடைய மோடி பெரும்பான்மை அடைய வேண்டும் என்பது இல்லை, பொருளாதாரம், வர்த்தகம் சிறப்பாக இருந்தாலே போதும் என்பதை தான் இன்றைய பங்குச்சந்தை காட்டுகிறது.
இந்த அதிசய உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண்பது, அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) கொள்கை முடிவுகள் சாதகமாக இருப்பது என பல காரணிகளும் இன்றைய உயர்வுக்கு காரணமாக உள்ளது.
மேலும் தேர்தலுக்கு பின்பு ஆர்பிஐ ஜிடிபி கணிப்புகள் மூலம் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலித்துள்ளது. இதோடு அடுத்த 5 வருடத்தில் சென்செக்ஸ் 100000 புள்ளிகளை தொடும் என பிரபல முதலீட்டாளர் மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications