தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்கு சந்தை குறியீடுகள் உயர்ந்து வரும் நிலையில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 36,880.44 புள்ளிகளைத் தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான முடிவுகள், ஏசிசி-ன் வருவாய் உயர்வு , கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவையும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. அது மட்டும் இல்லாமல் 37,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொடுமா என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரம்
காலை பங்கு சந்தை துவங்கியதில் இருந்து உயர்வைச் சந்தித்து வரும் நிலையில் 10:25 மணியளவில் சென்செக்ஸ் 162.13 புள்ளிகள் என 0.44 சதவீதம் உயர்ந்து 36,877.51 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 50.35 புள்ளிகள் என 0.46 சதவீதம் உயர்ந்து 11,135.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
லாபம் அளித்து வரும் பங்குகள்
வேதாந்தா, அதானி போர்ட்ஸ், மாருதி, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்து வரும் பங்குகள்
டிசிஎஸ், ரிலையன்ஸ், யெஸ் வங்கி ,விப்ரோ ,ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் நட்டத்தினை அளித்து வருகின்றன.